Tuesday, May 6, 2014

நோ டென்ஷன்..

சிலருக்கு எதுக்கெடுத்தாலும் பயங்கர கோபம் வரும், செமயா டென்ஷன் வரும். ஆனா ரொம்ப டென்ஷன் ஆறவங்களுக்கு மன அழுத்தம் தேடி தேடி வரும் அப்டின்னு ஆயுர்வேதத்தில் சொல்லி இருக்காங்க.  அப்படி மன அழுத்தம் கூடிகிட்டே இருந்துச்சு அப்டின்னா உடம்புல இருக்கிற ஹார்மோன்கள் ரொம்ப ரொம்ப பாதிக்கப்படும். அப்பறமா நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அல்சர் வரும், சோரியாசிஸ் அப்டின்ற தோல் நோய் கூட மன அழுத்தத்தால் தான் வருதுன்னு சொல்றாங்க.  அதனால ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.. டென்ஷன் அப்டியே எகிற ஆரம்பிக்கிறப்பவே, கூல் கூல்னு மன்சை கன்ட்ரோல் பண்ணுங்க. அப்படி இல்லாட்டா தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சா மன அழுத்தத்தை உண்டு பண்ணுற ஹார்மோனை அது கன்ட்ரோல் பண்ணும் அப்படின்னு ஒரு அமெரிக்க ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்க.  அதுவும் இல்லாட்டா தினமும் ஒரே ஒரு நெல்லிக்காய் வாங்கி சாப்பிடுங்க. ஏன்னா ஒரு நெல்லிக்காய்ல, ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு விட்டமின் சி நெறைய இருக்குதுன்னு சொல்றாங்க. அதனால டென்ஷன் பார்டீஸ் இந்த விஷய்ங்கள் எல்லாம் நோட் பண்ணிகோங்க ..ஓகேயா?

1 comment:

  1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/dh.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete